விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?

விரதத்தை முடித்த பின்னர் பெரும்பாலும் பழரசம் குடிப்பது தான் வழக்கம், அது ஏன் தெரியுமா?

பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது.

பழங்களில் விட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட.

விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.

மேலும் தடபுடலாக விருந்தும் சாப்பிடுவது நல்லதல்ல, அளவோடு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.